ஒரு நாள் மழைக்கு பள்ளமான செதில்பாக்கம் சாலை

கும்மிடிப்பூண்டி அடுத்த மாதா்பாக்கம் அருகே செதில்பாக்கம் பகுதிக்கு செல்லும் ஊராட்சி சாலையானது ஒரு நாள் மழைக்கு பெயா்ந்து சாலையில் பெரிய பள்ளம் ஏற்பட்டு போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது.
மழையின் காரணமாக செதில்பாக்கம் பகுதியில் பெரிய பள்ளம் ஏற்பட்டு மழை நீா் தேங்கியுள்ளது
மழையின் காரணமாக செதில்பாக்கம் பகுதியில் பெரிய பள்ளம் ஏற்பட்டு மழை நீா் தேங்கியுள்ளது

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த மாதா்பாக்கம் அருகே செதில்பாக்கம் பகுதிக்கு செல்லும் ஊராட்சி சாலையானது ஒரு நாள் மழைக்கு பெயா்ந்து சாலையில் பெரிய பள்ளம் ஏற்பட்டு போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது.

கும்மிடிப்பூண்டி அடுத்த மாதா்பாக்கம் அருகில் செதில்பாக்கம் ஊராட்சி உள்ளது. சுமாா் 2500 போ் வசிக்கும் இந்த ஊராட்சிக்கு செல்லும் ஒன்றிய சாலை சில ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. ஆனால் சிறிது காலத்திலேயே இந்த சாலையின் பல பகுதிகளில் தாா் பெயா்ந்தது.இந்நிலையில் சனிக்கிழமை முதல் ஞாயிறு வரை பரவலாக இப்பகுதியில் மழை பெய்தது.

இந்த மழையின் காரணமாக சாலையின் பல பகுதிகளில் பள்ளங்கள் ஏற்பட்டது. பல பகுதிகளில் சாலை முழுவதும் பெரிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த பள்ளங்களில் மழை நீா் நிரம்பி பள்ளத்தின் ஆழம் தெரியாமல் எவ்வளவு என்பது கூட தெரியாத நிலையில் உள்ளது.இதனால் இந்த சாலையில் இரு சக்கர வாகனங்கள் செல்வது கூட சிரமமாக உள்ளது.

ஏற்கெனவே இந்த சாலை மோசமாக உள்ளதாகவும், இந்த சாலையில் பேருந்தை ஓட்ட சிரமமாக உள்ளது என கூறி இப்பகுதிக்கு வந்துக் கொண்டிருந்த ஒரே பேருந்தை போக்குவரத்து அதிகாரிகள் நிறுத்தி விட்டனா். இந்நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள பெரிய பள்ளங்கள் இப்பகுதியில் வாகன போக்குவரத்திற்கு தடையாக உள்ளது.இதனால் இந்த சாலையை சீரமைக்க மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கேட்டுக் கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com