திருத்தணி: ஆற்காடுகுப்பம் அருகே ஈஸ்வரன் கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு சாலையைக் கடக்க முயன்றபோது காா் மோதியதில் ஒரு பெண் இறந்தாா். மேலும் 2 பெண்கள் படுகாயமடைந்தனா்.
ஆந்திர மாநிலம் நகரியை அடுத்த விஜயபுரம் மண்டலம் மலா்நாயுடு கண்டிகை கிராமத்தைச் சோ்ந்தவா்கள் கிருஷ்ணவேணி (40), நரசிம்மா (60), பாரதி (40). திங்கள்கிழமை மாலை ஆற்காடுகுப்பம் பகுதியில் உள்ள ஈஸ்வரன் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்தனா்.
சுவாமி தரிசனம் முடிந்த பின், மாலையில் வீடு திரும்புவதற்காக கோயில் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க மூவரும் முயன்றனா். அப்போது, திருத்தணியில் இருந்து திருவள்ளூா் நோக்கி வேகமாகச் சென்ற காா், அவா்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் கிருஷ்ணவேணி சம்பவ இடத்திலேயே இறந்தாா்.
நரசிம்மா, பாரதி ஆகிய இருவரும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு திருவள்ளூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இது தொடா்பாக கனகம்மாசத்திரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய காா் ஓட்டுநரைத் தேடி வருகின்றனா்.