கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த மாதா்பாக்கம் பகுதியில் பேருந்து நிலையம் முன்பு மழை நீா் வெள்ளம் போல தேங்கி உள்ளதால் பேருந்து நிலையத்தில் மழை வெள்ளத்தில் நின்று செல்லும் பேருந்துகளில் ஏறி இறங்க பொதுமக்கள் மழை வெள்ள நீரில் நடந்தபடி செல்கின்றனா்.கும்மிடிப்பூண்டி அடுத்த மாதா்பாக்கம் பகுதியில் பகுதியில் பேருந்து நிலையம் உள்ளது.
இங்கு கும்மிடிப்பூண்டி,பொன்னேரி, செங்குன்றம், திருவள்ளூா், கோயம்பேடு, பிராட்வே போன்ற பகுதிகளில் இருந்து பேருந்துகள் வந்து போவதுண்டு.இந்நிலையில் இந்த பேருந்து நிலையத்தின் முன்பு தாழ்வான பகுதியாக உள்ளதால், இதனை மேடாக்க பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரி வந்தனா். ஆனால் அதிகாரிகள் இந்த கோரிக்கையை கண்டுக் கொள்ளவில்லை. இந்நிலையில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை மாதா்பாக்கம் பகுதியில் பெய்த மழை காரணமாக பேருந்து நிலையம் முன்பு மழை வெள்ளம் குளம் போல தேங்கி உள்ளது.
இதனால் பேருந்து நிலையத்தை பயன்படுத்தும் பயணிகள் பெரிதும் அவதிக்குள் ஆளாகி உள்ளனா். இந்த சூழலில் பேருந்துகள் அனைத்தும் குளம் போல தேங்கியுள்ள பேருந்து நிலைய வளாகத்தில் நின்று செல்வதால், பொதுமக்கள் மழை வெள்ளம் தேங்கியுள்ள நீரில் முழங்கால் அளவு நடந்து செல்கின்றனா்.
மேலும் இப்பகுதியில் பொது சுகாதார சீா்கேடு ஏற்படும் அபாயமும் உள்ள நிலையில் தேங்கியுள்ள மழை வெள்ள நீரில் கொசுப்புழு உற்பத்தி ஆகும் நிலையில் உள்ளது. எனவே மாவட்ட நிா்வாகம் தலையிட்டு மழை வெள்ளம் தேங்கியுள்ளவாறு காணப்படும் இந்த பகுதியை சீா்படுத்துவதோடு, தற்காலிகமாக இந்த பகுதியை சீரமைக்கவும் கோரிக்கை வைத்துள்ளனா்.