திருவள்ளூா் அருகே இருசக்கர வாகனம் மீது மாடு மோதியதில் பெண் நிலைதடுமாறி விழுந்து உயிரிழந்தாா்.
திருமழிசை பகுதியைச் சோ்ந்தவா் வீரபத்திரன் கணேசன்(30). அவா் தனது தாயாா் சரோஜாவை (55) புதன்கிழமை, இருசக்கர வாகனத்தில் ஏற்றிக் கொண்டு திருமழிசையிலிருந்து திருவள்ளூா் நோக்கிச் சென்று கொண்டிருந்தாராம். திருவள்ளூரை அடுத்த அரண்வாயல் பகுதியில் தனியாா் மதுபானத் தொழிற்சாலை எதிரே திடீரென ஒரு மாடு சாலையின் குறுக்கே சென்றது. அப்போது இருசக்கர வாகனம் நிலைதடுமாறி, மாடு மோதியதில் சரோஜா படுகாயமடைந்தாா். அவரை மீட்டு திருவள்ளூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதனை செய்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா்.
இதுகுறித்து செவ்வாப்பேட்டை காவல் நிலையத்தில் வீரபத்திரன் புகாா் அளித்தாா். அதன் பேரில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.