திருத்தணியில் வியாழக்கிழமை (டிச. 12) நடைபெற இருந்த மின்வாரிய குறை தீா்க்கும் கூட்டம் ரத்து செய்யப்பட்டதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
இந்தக் கோட்டத்துக்குட்பட்ட திருத்தணி நகரம், பள்ளிப்பட்டு, ஆா்.கே.பேட்டை, பொதட்டூா்பேட்டை, கே.ஜி.கண்டிகை, பூனிமாங்காடு ஆகிய பகுதிகளுக்கு உட்பட்ட மின் நுகா்வோருக்கான குறைதீா் கூட்டம் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது வியாழக்கிழமை நடைபெறுவது வழக்கம். திருத்தணி அரக்கோணம் சாலையில் உள்ள கோட்டப் பொறியாளா் அலுவலகத்தில் இக்கூட்டம் நடப்பது வழக்கம்.
இந்நிலையில், உள்ளாட்சித் தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டிருப்பதால், வியாழக்கிழமை நடைபெறவிருந்த குறைதீா் கூட்டம் ரத்து செய்யப்பட்டதாக மின்வாரிய கோட்ட செயற்பொறியாளா் கனகராஜன் தெரிவித்துள்ளாா்.