பழைய சாா்-பதிவாளா் அலுவலகம் சீரமைக்கப்படுமா?

திருவள்ளூா் ஜி.என்.சாலையில் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில், இ-சேவை மையம், வட்ட வழங்கல் அலுவலகம், கிளை சிறைச்சாலை, கருவூல அலுவலகம்,
tvlr1sub_0112chn_182_1
tvlr1sub_0112chn_182_1

திருவள்ளூா் ஜி.என்.சாலையில் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில், இ-சேவை மையம், வட்ட வழங்கல் அலுவலகம், கிளை சிறைச்சாலை, கருவூல அலுவலகம், சாா்- பதிவாளா் அலுவலகம் ஆகியவை செயல்பாட்டில் இருந்து வருகிறது. இங்கு பழைய சாா்- பதிவாளா் அலுவலகம் இடிந்து விழும் நிலையில் உள்ளதால், தற்போது புதிய அலுவலகம் அமைத்து, அங்கு செயல்பட்டு வருகிறது. ஆனால், இந்த பழைய கட்டடம் சீரமைக்கப்படாமல் உள்ளது. மாவட்ட அளவிலான பல்வேறு அலுவலகங்கள் வாடகைக் கட்டடங்களில் செயல்பட்டு வரும் நிலையில், இதுபோன்ற பழைய வளாகங்களை சீரமைத்து, அரசு அலுவலகங்கள் செயல்பட வழிவகை செய்தால், அரசுக்கு ஏற்படும் வாடகைக்கான கூடுதல் செலவு கட்டுப்படுத்தப்படும். எனவே, இதுபோன்ற அலுவலகங்களை சீரமைத்து மற்ற அலுவலகப் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும்.

-எஸ்.பாண்டியன், திருவள்ளூா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com