பூந்தமல்லி வரும் முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு: செயல்வீரர்கள் கூட்டத்தில் முடிவு

பூந்தமல்லியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வெள்ளிக்கிழமை (ஜன.18) வருகை தரவிருக்கும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்க அதிமுக


பூந்தமல்லியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வெள்ளிக்கிழமை (ஜன.18) வருகை தரவிருக்கும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்க அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் செவ்வாய்க்கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருவள்ளூரில் அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் அக்கட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பொன்னேரி சட்டப்பேரவை உறுப்பினர் சிறுணியம் பலராமன் தலைமை வகித்தார். அப்போது, பூந்தமல்லி பகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வெள்ளிக்கிழமை (ஜன.18) வருகை தரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது குறித்து அக்கட்சியினர் தீர்மானம் நிறைவேற்றினர். 
நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்டக் குழுத் தலைவர் ரவிச்சந்திரன், ஒன்றியச் செயலர்கள் சுதாகர், புட்லூர் சந்திரசேகர், கந்தசாமி, விஜயலட்சுமி ராமமூர்த்தி, முன்னாள் நகர் மன்றத் தலைவர் கமாண்டோ பாஸ்கரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com