கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கம் பகுதியில் காணும் பொங்கலையொட்டி போலீஸார் வியாழக்கிழமை நடத்திய வாகனச் சோதனையில் விதிமீறல்களில் ஈடுபட்ட 82 இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்தனர்.
ஆரம்பாக்கத்தை அடுத்த ஆந்திர மாநிலப் பகுதியான வரதையபாளையத்தில் கோனே நீர்வீழ்ச்சி உள்ளது.
இங்கு காணும் பொங்கலையொட்டி சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் சென்றிருந்தனர்.
இந்நிலையில், ஆரம்பாக்கம் போலீஸார் வியாழக்கிழமை அதிரடி வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனம் ஒட்டிய 41 பேரும், மது அருந்தி வாகனம் ஓட்டிய 41 பேரும் பிடிபட்டனர். தொடர்ந்து 82 பேருக்கும் அபராதம் விதிக்கப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.