திருத்தணி அருகே பொம்மராஜிபுரம் கிராமத்தில் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த 3 வயது குழந்தை திங்கள்கிழமை இறந்தது.
திருத்தணி ஒன்றியம் பொம்மராஜிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகள் தீபிகா(3). இவர், திங்கள்கிழமை மாலை வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, தெருவில் உள்ள தண்ணீர் தொட்டியில் தீபிகா தவறி விழுந்து இறந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து வந்த திருத்தணி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து
வருகின்றனர்.