தண்ணீர் தொட்டியில் விழுந்து 3 வயது குழந்தை சாவு

திருத்தணி அருகே பொம்மராஜிபுரம் கிராமத்தில் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த 3 வயது குழந்தை திங்கள்கிழமை இறந்தது.

திருத்தணி அருகே பொம்மராஜிபுரம் கிராமத்தில் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த 3 வயது குழந்தை திங்கள்கிழமை இறந்தது.
திருத்தணி ஒன்றியம் பொம்மராஜிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகள் தீபிகா(3). இவர், திங்கள்கிழமை மாலை வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, தெருவில் உள்ள தண்ணீர் தொட்டியில் தீபிகா தவறி விழுந்து இறந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து வந்த திருத்தணி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து 
வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com