மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா

திருத்தணியை அடுத்த பாப்பிரெட்டிப்பட்டி மாரியம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தீ மிதித் திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

திருத்தணியை அடுத்த பாப்பிரெட்டிப்பட்டி மாரியம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தீ மிதித் திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
 பாப்பிரெட்டிப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள மாரியம்மன் கோயிலில் 33-ஆம் ஆண்டு தீ மிதித் திருவிழா கடந்த செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
 அதைத் தொடர்ந்து நாள்தோறும் காலை 9 மணி அளவில் கரக ஊர்வலம், தீபாராதனை, மாலையில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்று வந்தது.
 இந்நிலையில், கோயிலில் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு அம்மனுக்கு பால் அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. காலை 11 அளவில் கோயில் அருகில் பெண் பக்தர்கள் கோலம் போட்டு, கூழ் வார்த்து, பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். காப்புக் கட்டி விரதமிருந்து வந்த பக்தர்கள், இரவு 7 மணியளவில் தீ மிதித்து அம்மனை வழிபட்டனர்.
 இரவு 8 மணிக்கு வாணவேடிக்கையும் 8.30 மணிக்கு அம்மன் திருவீதி உலாவும் சிறப்பாக நடைபெற்றன. 10 மணி அளவில் பக்தி நாடகம் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com