மீஞ்சூரில் நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற 2 பேரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
ரமணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் தெய்வானை (39). இவர், வெள்ளிக்கிழமை அப்பகுதியில் நடந்து சென்றபோது, பைக்கில் வந்த 2 பேர் தெய்வானை கழுத்தில் இருந்த தங்க நகையை பறிக்க முயன்றனர். அவர் நகையைப் பிடித்தபடி கூச்சலிட்டார். இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் பைக்கில் தப்பிச் செல்ல முயன்ற இருவரையும் பிடித்தனர்.
தகவலறிந்த மீஞ்சூர் போலீஸார் அங்கு சென்று இருவரையும் மீட்டு காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். இருவரும் சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்த பிரசாந்த் (18), மணிகண்டன் (18) என தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.