ஆற்றில் மணல் திருடிய இருவர் கைது

ஊத்துக்கோட்டை அருகே ஆற்றில் மணல் கடத்தி வந்த இருவரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.


ஊத்துக்கோட்டை அருகே ஆற்றில் மணல் கடத்தி வந்த இருவரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
ஊத்துக்கோட்டை அருகே உள்ள ஆரணி ஆற்றுப் பகுதில் ஆரணி போலீஸார் புதன்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை சோதனையிட்டதில் ஆற்றில் இருந்து மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து மணல் கடத்தி வந்த மேல் முதலம்பேடு கிராமத்தைச் சேர்ந்த நேதாஜி (19), ஐயப்பன் (22) ஆகிய இருவரையும் கைது செய்து, இருசக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com