மீஞ்சூர் அருகே லாரி ஓட்டுநரைத் தாக்கி பணத்தை பறித்த 3 பேரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
கம்மாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சுபாஷ்கர் (24). சரக்கு லாரி ஓட்டுநர். இவர், சரக்கு லாரியில் வியாழக்கிழமை பெரியமுல்லைவாயல் பகுதியில் சென்றபோது, லாரியை சாலையோரத்தில் நிறுத்தி விட்டு தூங்கினாராம். அப்போது, பைக்கில் வந்த 3 பேர் சுபாஷை தாக்கி அவரிடம் இருந்து ரூ. 5ஆயிரத்தைப் பறித்துச் சென்றனர்.
இதில் காயமடைந்த அவர் பொன்னேரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்து மீஞ்சூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, பெரியமுல்லை வாயல் பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் (24), ஜெகதீஷ் (25) உள்ளிட்ட 3 பேரைக் கைது செய்தனர்.