திருவள்ளூர் அருகே பாழடைந்த விவசாயக் கிணற்றில் தூக்கிட்ட நிலையில் இருந்த இளைஞரின் சடலத்தை போலீஸார் மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவள்ளூரை அடுத்த பெரியகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன், விவசாயி. இவருக்கு கொசஸ்தலை ஆற்றங்கரையோரம் 3 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் நிலம் உள்ளது. இங்கு வெங்கடேசன் நிலத்தை பார்ப்பதற்காக சென்றாராம்.
அப்போது பாழடைந்த கிணற்றுப் பகுதியிலிருந்து துர்நாற்றம் வீசியதால், அங்கு சென்று பார்த்துள்ளார். அப்போது, அழுகிய நிலையில் ஆண் சடலம் தூக்கில் தொங்கியபடி இருந்தது. இதுகுறித்து திருவள்ளூர் நகர காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில், அங்கு வந்த உதவி ஆய்வாளர் சக்திவேல் மற்றும் போலீஸார் சடலத்தை மீட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது கொலையா, தற்கொலையா என விசாரணை நடத்தி வருகின்றனர்.