உலக நுகர்வோர் உரிமை தினவிழாவில், திருத்தணி எம்எல்ஏ பி.எம்.நரசிம்மனுக்கு சமூக சேவை விருதை நடிகை ரோஜா வழங்கினர்.
திருத்தணி அரக்கோணம் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில், நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் சார்பில் உலக நுகர்வோர் உரிமை தினவிழா வெள்ளிக்கிழமை நடந்தது. மாநிலத் தலைவர் ரமேஷ் தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் கோவிந்தராஜ் வரவேற்றார்.
இதில், திருத்தணி சார்பு நீதிமன்ற நீதிபதி எம்.ஏ.கபீர், திரைப்பட நடிகையும் ஆந்திர மாநிலம் நகரி சட்டப்பேரவை உறுப்பினருமான ரோஜா, திருத்தணி சட்டப்பேரவை உறுப்பினர் பி.எம். நரசிம்மன், திருத்தணி டி.எஸ்.பி. சேகர் ஆகியோர் பங்கேற்று நுகர்வோர் தினம் குறித்து பேசினர். நிகழ்ச்சியில் திருத்தணியில் சமூக சேவை செய்து வரும் முக்கிய பிரமுகர்களுக்கு சிறப்பு செய்யப்பட்டு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், முன்னாள் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கே.பி.எஸ்.விஸ்வநாதன், கௌரவத் தலைவர் சீனிவாசன், அமைப்பாளர் சுதர்சனம், பொருளாளர் மாசிலாமணி, சட்ட ஆலோசகர் தமிழரசு உள்பட, 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.