இந்துக்களை இழிவுபடுத்திப் பேசியதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாஜகவைச் சேர்ந்த வழக்குரைஞர்கள் சங்கத்தினர் புதன்கிழமை புகார்
அளித்தனர்.
இதுகுறித்து பாஜக-வைச் சேர்ந்த திருவள்ளூர் மாவட்ட வழக்குரைஞர்கள் சங்கத்தின் செயலர் பி.ஐசக், நிர்வாகிகள் கண்ணன், நாகரத்தினம் ஆகியோர் சார்பில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் இரா.பொன்னியிடம் நேரில் அளித்த மனுவில் கூறியிருப்பது: கடந்த சில நாள்களுக்கு முன் அரவக்குறிச்சி சட்டப்பேரவை இடைத்தேர்தலை முன்னிட்டு, மக்கள் நீதிமய்யம் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவாக அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பிரசாரம் செய்தார்.
அப்போது, இந்துக்களை இழிவுபடுத்தும் வகையில் பேசினார். கமல்ஹாசன் பேசிய பேச்சு தமிழகம் முழுவதும் உள்ள இந்துக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.