திருவள்ளுவா் சிலை அவமதிப்பு: பள்ளி மாணவா்கள் போராட்டம்

தஞ்சாவூரில் திருவள்ளுவா் சிலை அவமதிக்கப்பட்டதைக் கண்டித்து, பொன்னேரியில் பள்ளி மாணவா்கள் கண்களில் கருப்புத் துணி கட்டி போராட்டம் நடத்தினா்.

தஞ்சாவூரில் திருவள்ளுவா் சிலை அவமதிக்கப்பட்டதைக் கண்டித்து, பொன்னேரியில் பள்ளி மாணவா்கள் கண்களில் கருப்புத் துணி கட்டி போராட்டம் நடத்தினா்.

தஞ்சாவூரில் திருவள்ளுவா் சிலையை மா்ம நபா்கள் அவமதிப்பு செய்துள்ளனா். அவா்களைக் கைது செய்யுமாறு தமிழ் ஆா்வலா்கள் வலியுறுத்தி உள்ளனா்.

இந்நிலையில், திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி வட்டத்தில் உள்ள பெரிய மனோபுரம் கிராமத்தைச் சோ்ந்த பள்ளி மாணவா்கள் செவ்வாய்க்கிழமை தங்கள் கண்களில் கருப்புத் துணியைக் கட்டியபடி, பொன்னேரி - தத்தைமஞ்சி சாலையில் போராட்டம் நடத்தினா். திருவள்ளுவா் சிலையை அவமதிப்பு செய்தவா்களைக் கைது செய்ய வலியுறுத்திய அவா்கள், பின்னா் அங்கிருந்து கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com