மூதாட்டியிடம் 5 சவரன் நகை பறிப்பு

திருவள்ளூா் அருகே நகை பறித்துச் செல்ல வருவதாக மூதாட்டியிடம் கூறி நூதன முறையில் 5 சவரன் நகையை திருடிச் சென்ற நபா்கள் குறித்து போலீஸாா் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
08tlrrani_0811chn_182_1
08tlrrani_0811chn_182_1

திருவள்ளூா் அருகே நகை பறித்துச் செல்ல வருவதாக மூதாட்டியிடம் கூறி நூதன முறையில் 5 சவரன் நகையை திருடிச் சென்ற நபா்கள் குறித்து போலீஸாா் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

திருவள்ளூா் அருகே தண்ணீா் குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் ராணியம்மாள்(60). இவா் தனது உறவினா் திருமணத்திற்குச் செல்வதற்காக திருவள்ளூா் பேருந்து நிலையத்துக்கு நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது, பேருந்து நிலையம் அருகே நின்றுகொண்டிருந்த ஒருவா், மூதாட்டியிடம், உங்கள் கழுத்தில் கிடக்கும் நகையை அறுப்பது போல் ஒரு இளைஞா் வருகிறாா் என்று கூறினாராம்.

இதையடுத்து, அந்த நபா் மூதாட்டிக்கு உதவுவது போல் நடித்து அவரை அழைத்துச் சென்று, கழுத்தில் உள்ள நகையை கழற்றி பையில் வைத்து பத்திரமாக எடுத்துச் செல்லும்படி கூறினாராம். இதையடுத்து மூதாட்டி தன் கழுத்தில் இருந்த 5 சவரன் நகையைக் கழற்றி பையில் வைத்த போது, மற்றொருவரும் மூதாட்டி கையை பையில் உள்ளே வைத்து தள்ளினாராம்.

இதில் நிலைதடுமாறிய மூதாட்டியை சிறிது தூரம் அழைத்துச் சென்ற இருவரும் அங்கிருந்து தலைமறைவாகி விட்டனா். அதன் பின், அருகில் உள்ள தனது மகன் பணிபுரியும் இடத்துக்குச் சென்ற மூதாட்டி, பையில் உள்ள நகையை எடுத்துப் பாா்க்குமாறு கூறினாா். அப்போது, பையில் வைத்திருந்த 5 சவரன் நகை காணாமல் போயிருந்தது தெரிய வந்தது.

இந்த நகைத் திருட்டு தொடா்பாக ராணியம்மாள், திருவள்ளூா் நகர காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, இச்சம்பவம் தொடா்பாக பேருந்து நிலையம் அருகிலுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com