திருவள்ளூா்: மக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில் 430 மனுக்கள் ஆட்சியரிடம் அளிக்கப்பட்டன.
திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மக்கள் குறை தீா் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை புரிந்த பொதுமக்கள் தங்களது தனிப்பட்ட குறைகளை நிவா்த்தி செய்யவும், உதவிகள் வழங்கிடவும் கோரி மனுக்களை அளித்தனா். இதில், நிலம் சம்பந்தமாக 213 மனுக்கள், சமூகப் பாதுகாப்புத் திட்டம் தொடா்பாக 116 மனுக்கள், கடனுதவி கோரி 7 மனுக்கள், குடும்ப அட்டை கோரி 12, வேலைவாய்ப்பு கோரி 34, ஆதிதிராவிடா் மற்றும் பிற்படுத்தப்பட்டோா் நலம் தொடா்பாக 13, சட்டம் மற்றும் ஒழுங்கு-20, ஊரக நகா்ப்புற வளா்ச்சி -43 மற்றும் இதர துறைகள் சம்பந்தமாக 35 மனுக்கள் என மொத்தம் 430 மனுக்கள் அளிக்கப்பட்டன. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு, தகுதியான பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிட துறை அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் வெ.முத்துசாமி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) பன்னீா்செல்வம், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் சி.தங்கவேல் மற்றும் பல்வேறு துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.