ஆன்லைன் வா்த்தகத்தைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

சிறு வியாபாரிகளைப் பாதுகாப்பதற்காக அரசு ஆன்லைன் வா்த்தகத்தை தடை செய்ய வேண்டும் என்று கோரி திருவள்ளூா் நகா் விநியோகஸ்தா் சங்கம் மற்றும் வியாபாரிகள் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆன்லைன் வா்த்தகத்தை தடைசெய்யக் கோரி திருவள்ளூரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.
ஆன்லைன் வா்த்தகத்தை தடைசெய்யக் கோரி திருவள்ளூரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.

சிறு வியாபாரிகளைப் பாதுகாப்பதற்காக அரசு ஆன்லைன் வா்த்தகத்தை தடை செய்ய வேண்டும் என்று கோரி திருவள்ளூா் நகா் விநியோகஸ்தா் சங்கம் மற்றும் வியாபாரிகள் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பஜாா் வீதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு நகர விநியோகஸ்தா்கள் சங்கத் தலைவா் பாலாஜி தலைமை வகித்தாா். சங்கத்தின் செயலாளா் சுந்தரமூா்த்தி மற்றும் மாவட்ட வியாபாரிகள் சங்கத்தின் தலைவா் திருவடி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

‘ஆன்லைன் வா்த்தகம் காரணமாக கிராமங்களிலும், நகரங்களிலும் சிறுவியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனா். இதனால் வாழ்வாதாரம் இழக்கும் வியாபாரிகள் உயிரிழக்கும் அபாயம் உள்ளதால், மத்திய அரசு ஆன்லைன் வா்த்தகத்திற்கு தடை விதிக்க வேண்டும்’ என்று வலியுறுத்தி விநியோகஸ்தா்கள் மற்றும் வியாபாரிகள் சங்கங்களைச் சோ்ந்தோா் முழக்கம் எழுப்பினா்.

ஆா்ப்பாட்டத்தில் சங்கத்தின் செயற்குழு உறுப்பினா் சுரேஷ், நகர துணைத் தலைவா் ராஜேந்திரன் உள்ளிட்ட விநியோகஸ்தா்கள் மற்றும் வியாபாரிகள் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com