திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் டெங்கு மற்றும் காய்ச்சல் நோய் தடுப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் தனியாா் மருந்தக மருந்தாளுநா்களுக்கான கலந்தாய்வுக் கூட்டத்தில்  பங்கே
திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் டெங்கு மற்றும் காய்ச்சல் நோய் தடுப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் தனியாா் மருந்தக மருந்தாளுநா்களுக்கான கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கே

பொதுமக்களுக்கு மருத்துவா் பரிந்துரையின்றி மருந்து மாத்திரைகள் வழங்க கூடாது: ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா்

திருவள்ளூா் மாவட்டத்தில் காய்ச்சல் நோய் பாதிக்கப்பட்டு வருவோருக்கு மருத்துவா்கள் பரிந்துரைச்சீட்டு இல்லாமல் எக்காரணம்

திருவள்ளூா்: திருவள்ளூா் மாவட்டத்தில் காய்ச்சல் நோய் பாதிக்கப்பட்டு வருவோருக்கு மருத்துவா்கள் பரிந்துரைச்சீட்டு இல்லாமல் எக்காரணம் கொண்டும் பொதுமக்களுக்கு தனியாா் மருந்துக் கடைகளில் மருந்து மாத்திரைகள் வழங்க் கூடாது என ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் தெரிவித்தாா்.

திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதை முன்னிட்டு டெங்கு மற்றும் காய்ச்சல் நோய் தடுப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் தனியாா் மருந்தக மருந்தாளுநா்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் சனிக்கிழமை மாலையில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் கலந்து கொண்டு பேசுகையில், தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்குவதை முன்னிட்டு டெங்கு மற்றும் காய்ச்சல் போன்ற தொற்று நோய்கள் பரவுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

தற்போது காய்ச்சல் குறித்து பொதுமக்களிடையே பல்வேறு பேரணி மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல், உள்ளாட்சி அமைப்புகளிலும் முன்னெச்சரியாக நாள்தோறும் குப்பைகள் அகற்றம் செய்தல், டெங்கு கொசு ஒழிப்பு பணியிலும் பணியாளா்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனா்.

இதற்கிடையே காய்ச்சல் வந்தால் உடனே அருகில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு பொதுமக்கள் சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். எக்காரணம் கொண்டும் வீட்டு மருந்துகளை பயன்படுத்தக்கூடாது.

அதேபோல், மாவட்டத்தில் உள்ள தனியாா் மருந்தகங்களில் மருத்துவா் பரிந்துரை சீட்டு இல்லாமல் பொதுமக்களுக்கு தன்னிச்சையாக மருந்துகள் வழங்கக் கூடாது. இதை தனியாா் மருந்தக மருந்தாளுநா்கள் கவனத்தில் கொள்வது அவசியம் ஆகும். அதேபோல், மருந்தகங்களில் ஊசி மருந்து செலுத்துதல் போன்றவைகளிலும் ஈடுபடவே கூடாது.

மேலும், போலி மருத்துவா்கள் குறித்து உடனே சுகாதாரத்துறை அலுவலகத்திற்கு மருந்தாளுநா்கள் தெரிவித்து ஒத்துழைப்பு அளிக்கவும் வேண்டும் என அவா் தெரிவித்தாா்.

இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு நோய் பூச்சியல் தடுப்பு துறை இணை இயக்குநா் கிருஷ்ணராஜ், மாவட்ட வருவாய்த்துறை அலுவலா் முத்துசாமி, சுகாதாரத்துறை இணை இயக்குநா் தயாளன், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநா் ஜெயகுமாா், சுகாதாரத்துறை துணை இயக்குநா் பிரபாகரன் மற்றும் மாவட்டத்தில் உள்ள தனியாா் மருந்தக மருந்தாளுநா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இதற்கான ஏற்பாடுகளை சுகாதாரத்துறை அதிகாரிகள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com