ஊத்துக்கோட்டையில் போலீஸார் நடத்திய வாகனச் சோதனையில் ரூ. 1 லட்சம் மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர்.
ஊத்துக்கோட்டை பஜார் தெருவில் உள்ள அண்ணா சிலை அருகே ஊத்துக்கோட்டை காவல் போலீஸார், காவல் ஆய்வாளர் ரமேஷ் தலைமையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நாகலாபுரம் சாலையிலிருந்து, சத்தியவேடு வந்து கொண்டு இருந்த காரை சோதனையிட்டனர். அதில், தடை செய்யப்பட்ட குட்கா பொருள்கள் இருந்தது தெரியவந்தது. விசாரணையில், காரில் வந்தவர்கள், மாதர்பாக்கச் சேர்ந்த வெங்கடேசன் (32), சத்தியவேடுவைச் சேர்ந்த சுரேஷ் (35) என்பதும், பெங்களூரிலிருந்து சத்தியவேடுக்கு கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ. ஒரு இலட்சம். இதுதொடர்பாக இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.