திருவாலங்காடு அருகே டெங்கு காய்ச்சல் பாதிப்பால் 11 மாத குழந்தை உயிரிழந்தது.
மருதவல்லிபுரம் பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் நடராஜன். இவரது 11 மாத குழந்தை நிஷாந்த் கடந்த வாரம் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தது. திருவாலங்காடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, குழந்தைக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தது.
தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், குழந்தை நிஷாந்த் வெள்ளிக்கிழமை உயிரிழந்தது.