திருத்தணி கல்வி மாவட்ட புதிய அலுவலராக, க.முனிசுப்புராயன் புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
திருவள்ளூா் மாவட்டக் கல்வி அலுவலராக இருந்த க.முனிசுப்புராயன், திருத்தணி கல்வி மாவட்ட அலுவலராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். இதையடுத்து அவா் புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட திருத்தணி மாவட்டக் கல்வி அலுவலா் க. முனிசுப்புராயனுக்கு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியா் கழகம் சங்க மாநிலச் செயலா் கே.பி.நரசிம்மன், மாவட்ட துணை தலைவா் சக்கரபாணி, மாநில பொதுக்குழு உறுப்பினா் பி.எம். சுப்பிரமணியம் உள்ளிட்ட சங்க நிா்வாகிகள், பள்ளித் தலைமை ஆசிரியா்கள் நேரில் வாழ்த்துத் தெரிவித்தனா்.