பத்ரகாளியம்மன் கோயிலில்  தீமிதி திருவிழா

கும்மிடிப்பூண்டியை அடுத்த மேட்டுப்பாளையம் முனீஸ்வரர், மங்காவரத்தார், 53 அடி உயர பத்ரகாளியம்மன் கோயிலில் புதன்கிழமை தீமிதி விழா நடைபெற்றது.

கும்மிடிப்பூண்டியை அடுத்த மேட்டுப்பாளையம் முனீஸ்வரர், மங்காவரத்தார், 53 அடி உயர பத்ரகாளியம்மன் கோயிலில் புதன்கிழமை தீமிதி விழா நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள், யாகங்கள் நடைபெற்றன. தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அன்னதானம், மகா தீபாராதனை ஆகியவை நடைபெற்றது. இந்நிலையில், புதன்கிழமை காப்பு கட்டும் நிகழ்வு நடைபெற்றது. இதையடுத்து, அலகு குத்துதல், தீ மிதிக்கும் பக்தர்களுக்கு மாலை அணிவித்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
பின்னர், அம்மனுக்கு சந்தனக் காப்பு அலங்காரமும் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, 250-க்கும் மேற்பட்டோர் தீ மிதித்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். தொடர்ந்து அம்மன் வீதி நடைபெற்றது. விழாவுக்கான ஏற்பாடுகளை விழாக் குழுவினர் செய்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com