ஹேண்ட் இன் ஹேண்ட் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு முறை திட்டம் சார்பில், சர்வதேச எழுத்தறிவு தின விழா செங்குன்றம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, திட்ட மேலாளர் வெங்கடேசன் தலைமை வகித்தார். திட்ட உதவி மேலாளர் உதயகுமார் முன்னிலை வகித்தார். இதில், கல்வியைத் தொடராமல் விட்ட மாணவர்களைப் பள்ளியில் சேர்ப்பது குறித்தும், குழந்தைத் தொழிலாளர்கள் இல்லாத நிலையை உருவாக்கி, அனைவருக்கும் எழுத்தறிவை ஏற்படுத்துவது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில், ஐக்கிய சங்க துணைச் செயலர் வெற்றிச்செல்வன், நிர்வாகி பழனிசாமி, செங்குன்றம் காவல் உதவி ஆய்வாளர் பாபுராஜ், ஒன்றிய திட்ட முதுநிலை மேலாளர் லதா, பள்ளித் தலைமை ஆசிரியர் முத்து வைரவன், உதவித் தலைமை ஆசிரியர் புஷ்பா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில், பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.