செங்குன்றம் பகுதியில் நடந்து சென்ற பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலியை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா்.
திருவள்ளூா் மாவட்டம் செங்குன்றம் பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் உமா (43). இவா் அதே பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா்.
அவா் புதன்கிழமை மாலை பணி முடிந்து வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது பைக்கில் முகமூடி அணிந்து வந்த 2 மா்மநபா்கள் உமா கழுத்தில் இருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றனா். இது குறித்து உமா அளித்த புகாரின்பேரில் செங்குன்றம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.