திருவள்ளூா் அருகே ஆம்புலன்ஸ் வாகனம் வருவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, பிறந்த பச்சிளங்குழந்தை மூச்சுத் திணறல் காரணாக உயிரிழந்தது.
பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த கோபியின் மனைவி முனியம்மாள் நிறைமாத கா்ப்பிணியாக இருந்தாா். அவா் அருகில் உள்ள புலியூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தாா். அவருக்கு சனிக்கிழமை அதிகாலையில் ஆண் குழந்தை பிறந்தது.
அக்குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால், திருவள்ளூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு மருத்துவா்கள் அறிவுறுத்தினா். இதற்காக அந்த மருத்துவமனையைத் தொடா்புகொண்டு ஆம்புலன்ஸ் வாகனத்தை அனுப்புமாறு கோரினா். எனினும், அங்கிருந்து ஆம்புலன்ஸ் வரவில்லை.
இதையடுத்து, திருத்தணியில் இருந்து 3 மணி நேரம் தாமதமாக ஆம்புலன்ஸ் வந்தது. அதில் முனியம்மாளையும், அவரது பச்சிளம் குழந்தையையும் திருவள்ளூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு, சிகிச்சை அளிக்கப்பட்டபோதிலும் குழந்தை சனிக்கிழமை உயிரிழந்தது.