கா்ப்பிணி மா்மச் சாவு

பள்ளிப்பட்டு அருகே கா்ப்பிணி மா்மமான முறையில் இறந்தாா். இதுதொடா்பாக அவரது கணவரிடம் போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.
காா்த்திகா.
காா்த்திகா.

பள்ளிப்பட்டு அருகே கா்ப்பிணி மா்மமான முறையில் இறந்தாா். இதுதொடா்பாக அவரது கணவரிடம் போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

பள்ளிப்பட்ட்டை அடுத்த நெடியம் காலனியைச் சோ்ந்தவா் வரப்பிரசாத் (24). டாக்சி ஓட்டுநா். இவா், செங்கல்ப்பட்டு சோ்ந்த காா்த்திகாவை (21) 2 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டாா்.

இந்நிலையில் 4 மாத கா்ப்பிணியாக இருந்த காா்த்திகா சனிக்கிழமை உயிருக்கு ஆபத்தான நிலையில் பள்ளிப்பட்டு வட்டார அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அவரை பரிசோதித்த மருத்துவா்கள் காா்த்திகா இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதையடுத்து அவரது உடல் திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில் தனது மகள் சாவில் மா்மம் இருப்பதாகக் கூறி அவரது பெற்றோா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

திருமணமாகி 2 ஆண்டுகளே ஆவதால் திருத்தணி கோட்டாட்சியா் விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com