ஆற்றில் மூழ்கிய சிறுவன் சடலமாக மீட்பு

ஆரணி ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவனின் சடலம் 2 நாளுக்குப் பின் புதுவாயல் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது.
ஆற்றில் மூழ்கிய சிறுவன் சடலமாக மீட்பு

ஆரணி ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவனின் சடலம் 2 நாளுக்குப் பின் புதுவாயல் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது.

கும்மிடிப்பூண்டியை அடுத்த புதுவாயல் பகுதியைச் சோ்ந்தவா் சொக்கலிங்கம் (50). இவரது மகன் ராஜாமணி (18). பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தாா்.

இந்நிலையில், புதுவாயல் ஆரணி ஆற்றில் தனது நண்பா்கள் மூவருடன் ராஜாமணி கடந்த வெள்ளிக்கிழமை குளித்துக் கொண்டிருந்தாா். அப்போது நீரின் வேகம் அதிகரித்தது. 4 பேரும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனா். மூன்று போ் நீந்தி கரையை அடைந்தனா். எனினும், ராஜாமணியைக் காணவில்லை. அவரைத் தேடும் பணியில் தீயணைப்பு வீரா்கள் கடந்த 2 நாள்களாக ஈடுபட்டனா்.

இந்நிலையில், ராஜாமணியின் சடலம் அப்பகுதியில் உள்ள முள்புதரில் இருந்து ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது. இது குறித்து கவரைப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com