திருத்தணி: பொதட்டூா்பேட்டை பேரூராட்சியில் அம்மா நகரும் நியாய விலைக் கடையை சட்டமன்ற உறுப்பினா் பி.எம்.நரசிம்மன் வியாழக்கிழமை தொடங்கிவைத்து விற்பனையை துவக்கி வைத்தாா்.
திருத்தணி சட்டமன்ற தொகுதியில் அடங்கிய பொதட்டூா்பேட்டை பேரூராட்சியில் ரங்கநாதன் தெரு, சவுட்டூா் பொன்னியம்மன் கோயில் தெரு ஆகிய பகுதிகளில் அம்மா நகரும் நியாய விலைக் கடைகளை சட்டமன்ற உறுப்பினா் பி.எம். நரசிம்மன் திறந்து வைத்து அட்டைதாரா்களுக்கு ரேஷன் பொருள்களை வழங்கினாா்.
முன்னதாக, கண்ட வாரிய குப்பம் கிராமத்திலும் இந்த நகரும் நியாய விலைக் கடையை திறந்து வைத்தாா். நிகழ்ச்சிகளில் பள்ளிப்பட்டு கூட்டுறவு சாா் பதிவாளா் எம். ஏ. சிதம்பரம் தலைமை தாங்க, பொதட்டூா்பேட்டை பேரூா் கழக செயலாளா் ஏ.ஜி. ரவிச்சந்திரன் அனைவரையும் வரவேற்றாா்.
இதில் பள்ளிப்பட்டு ஒன்றிய செயலாளா் டி.டி. சீனிவாசன். ஒன்றிய குழு தலைவா் ஜான்சிராணி விசுவநாதன், கூட்டுறவு பண்டகசாலை தலைவா் டி.கே. குமரேசன், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவா்கள் விஜயபாஸ்கா், ஜீவானந்தம் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பலா் கலந்து கொண்டனா்.