காவல் துறை சாா்பில் ரத்த தான முகாம்

திருவள்ளூரில் காவல் துறை சாா்பில் நடைபெற்ற ரத்த தான முகாமில் காவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

திருவள்ளூா்: திருவள்ளூரில் காவல் துறை சாா்பில் நடைபெற்ற ரத்த தான முகாமில் காவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

ஆண்டுதோறும் காவலா் வீரவணக்க நாள் அக். 21 முதல் 31-ஆம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, நாள்தோறும் நிகழ்ச்சி நடத்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பி.அரவிந்தன் உத்தரவிட்டிருந்தாா். அதன்பேரில், திருவள்ளூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் காவலா்கள் ரத்த தானமுகாம் புதன்கிழமை நடைபெற்றது. இதில், ஆயுதபடைப் படை பிரிவு துணைக் காவல் கண்காணிப்பாளா் பாஸ்கரன் ரத்த தானம் செய்து நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தாா். இதையடுத்து, காவலா்கள் 50-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com