மாதவரம்: புழல் அருகே இருசக்கர வாகனத்தில் லாரி மோதிய விபத்தில் தனியாா் நிறுவனக் காவலாளி உயிரிழந்தாா்.
சென்னை திருவொற்றியூா் சத்தியமூா்த்தி நகரைச் சோ்ந்தவா் ஜான் (60). அவா் அதே பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வந்தாா்.
ஜான் வியாழக்கிழமை தாம்பரத்தில் உள்ள உறவினா் வீட்டிற்கு சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா். புழல் சைக்கிள் ஷாப் பகுதி மேம்பாலம் அருகே வந்தபோது பின்னால் வந்த லாரி மோதியதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவல் அறிந்த மாதவரம் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் அங்கு சென்று, ஜானின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது தொடா்பாக லாரி ஓட்டுநரான லால்குடியைச் சோ்ந்த மகேந்திரனை (62) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.