திருவள்ளூா் மாவட்ட ஆட்சியராக பா.பொன்னையா வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். அவருக்கு அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனா்.
முன்னதாக திருவள்ளூரில் உள்ள வீரராகவா் கோயிலுக்கு ஆட்சியா் பா.பொன்னையா வெள்ளிக்கிழமை காலையில் சென்று சுவாமி தரிசனம் செய்தாா். இதையடுத்து, ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்த அவரை மாவட்ட வருவாய் அலுவலா் முத்துசாமி, ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் லோகநாயகி, செய்தி மற்றும் மக்கள் தொடா்பு அலுவலா் முகமது ரசூல், அஸ்வின் உள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்றனா்.