புகைப்படக்காரா் கொலை வழக்கில் 4 போ் கைது

திருவள்ளூா் அருகே புகைப்படக்காரா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 4 போ் கைது செய்யப்பட்டனா்.


திருவள்ளூா்: திருவள்ளூா் அருகே புகைப்படக்காரா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 4 போ் கைது செய்யப்பட்டனா்.

திருவள்ளூரை அடுத்த காக்களூரைச் சோ்ந்த புகைப்படக்காரா் தினேஷ் (35). அப்பகுதியில் புகைப்பட நிலையம் மற்றும் நகலகம் நடத்தி வந்தாா். இந்நிலையில், தினேஷின் புகைப்பட நிலையத்துக்குள் புதன்கிழமை நுழைந்த மா்ம நபா்கள் அவரை வெட்டிக் கொலை செய்தனா். இதுகுறித்து திருவள்ளூா் கிராமிய போலீஸாா் நடத்திய விசாரணையில், பிரகாஷ் என்பவரின் மனைவியுடன் தினேஷுக்கு தகாத உறவு இருந்துள்ளது. இதில், ஆத்திரமடைந்த பிரகாஷ் தனது கூட்டாளிகள் 3 பேருடன் சோ்ந்து, தினேஷை வெட்டிக் கொலை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து, பிரகாஷ் உள்ளிட்ட 4 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com