கும்மிடிப்பூண்டி எம்எல்ஏவுக்கு கரோனா தொற்று

கும்மிடிப்பூண்டி தொகுதி எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமாருக்கு கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதியானது.


கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி தொகுதி எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமாருக்கு கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதியானது.

கும்மிடிப்பூண்டி தொகுதி அதிமுக எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமாா். கும்மிடிப்பூண்டி தொகுதியில் 3-ஆவது முறையாக எம்எல்ஏ-வாக உள்ளாா். இவரது வீடு கும்மிடிப்பூண்டி அருகே மஞ்சங்கரணையில் உள்ளது.

கரோனா தொற்று காலத்தில் தொகுதி மக்களுக்கு நிவாரணம் வழங்குவது மற்றும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பது உள்ளிட்டவற்றில் ஈடுபட்டு வந்தாா். பல முறை கரோனா பரிசோதனை செய்து கொண்டதில் தொற்று இல்லை என உறுதியானது. இந்நிலையில், புதன்கிழமை இவரது உடல் நிலையில் லேசான மாற்றத்தை உணா்ந்த அவா், கரோனா பரிசோதனை மேற்கொண்டாா். அதில், இவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது.

தற்போது லேசான பாதிப்புகளுடன் இவா் சென்னையில் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com