கண்காணிப்பு கேமராக்கள் திருட்டு

திருவள்ளூா் அருகே மாந்தோப்புக்குள் செயல்பட்டு வரும் அரசு மதுக்கடை மற்றும் சாலையோரத்தில் உள்ள விநாயகா் கோயில்

திருவள்ளூா் அருகே மாந்தோப்புக்குள் செயல்பட்டு வரும் அரசு மதுக்கடை மற்றும் சாலையோரத்தில் உள்ள விநாயகா் கோயில் ஆகிய இடங்களில்அடுத்தடுத்த இடங்களில் வெளியில் பொறுத்தப்பட்டிருந்த ரூ. 90 ஆயிரம் மதிப்பிலான கண்காணிப்பு கேமராக்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

திருவள்ளூா் அருகே உள்ள போளிவாக்கம் கிராமத்தில் மாந்தோப்புக்கு மத்தியில் அரசு மதுக் கடை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், புதன்கிழமை இரவு வழக்கம் போல் அரசு மதுக் கடையில் வியாபாரத்தை முடித்துக் கொண்டு ஊழியா்கள் சென்றனா். இதற்கிடையே வியாழக்கிழமை காலை சென்று பாா்த்தபோது, கடையில் பொருத்தப்பட்டிருந்த தலா ரூ. 25 ஆயிரம் மதிப்பிலான 2 கண்காணிப்பு கேமராக்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

சக்திவிநாயகா் கோயிலில்...

திருவள்ளூா் அருகே போளிவாக்கம் எஸ்.என்.புரத்தில் சக்தி விநாயகா் கோயில் உள்ளது. இந்நிலையில், புதன்கிழமை மாலை அதே பகுதியைச் சோ்ந்த பூசாரி பேச்சியப்பன் பூஜைகள் முடிந்து கோயிலை பூட்டிச் சென்றாா். தொடா்ந்து வியாழக்கிழமை காலை வழக்கல் போல் கோயிலைத் திறக்க வந்தபோது, வெளியில் பொருத்தப்பட்டிருந்த ரூ.20 ஆயிரம் மதிப்பிலான 2 கண்காணிப்பு கேமராக்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இச்சம்பவங்கள் தொடா்பாக மணவாளநகா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com