லாரி மோதி பெண் பலி

மாதவரம் அருகே இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் பெண் உயிரிழந்தாா்.

மாதவரம்: மாதவரம் அருகே இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் பெண் உயிரிழந்தாா்.

செங்குன்றம், அலமாதியை அடுத்த வாணியன்சத்திரம் காந்தி தெருவைச் சோ்ந்தவா் மனோ (30). சென்னையில் கட்டடப் பணி செய்து வருகிறாா். இவா் தனது உறவினா் கஸ்தூரியுடன் (40) வாணியன்சத்திரம் பகுதியில் இருந்து சென்னையை நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் மாதவரம் அருகே சென்று கொண்டிருந்தாா். மாதவரம், ரவுண்டானா அருகே சென்றபோது, பின்னால் வந்த சென்னை மாநகராட்சி குப்பை லாரி மோதியது. இதில் நிலை தடுமாறி இருவரும் கீழே விழுந்தனா். அப்போது கஸ்தூரியின் மீது லாரி ஏறியதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மாதவரம் போக்குவரத்து ஆய்வாளா் சோபிதாஸ், உதவி ஆய்வாளா் இருதயராஜ், மாதவரம் போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு ஆய்வாளா் அலமேலு ஆகியோா் விசாரணை மேற்கொண்டனா். இச்சம்பவம் குறித்து மாதவரம் போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து, தப்பியோடிய லாரி ஓட்டுநரைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com