திருவள்ளூர் அருகே கிருஷ்ணா நீர் இணைப்பு கால்வாயில் மூழ்கி சிறுவன் சாவு

திருவள்ளூர் அருகே கிருஷ்ணா நீர் புழல் ஏரிக்குச் செல்லும் இணைப்பு கால்வாயில் குளிக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி பலியானான். 
கோப்புப்படம்
கோப்புப்படம்

திருவள்ளூர் அருகே கிருஷ்ணா நீர் புழல் ஏரிக்குச் செல்லும் இணைப்பு கால்வாயில் குளிக்கச் சென்ற சிறுவன் மூழ்கி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக செவ்வாப்பேட்டை காவல் நிலைய காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

சென்னை பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பூண்டி ஏரியில் இருந்து இணைப்பு கால்வாய்கள் வழியாக செம்பரம்பாக்கம், புழல் ஏரிக்கு நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. திருவள்ளூர் அருகே தண்ணீர்குளம் கிராமத்தைச் சேர்ந்த தட்சணாமூர்த்தியின் மகன் சந்தோஷ்(12). இவர் அப்பகுதி பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்தான். 

இந்த நிலையில் கிராமம் வழியாக செல்லும் இணைப்பு கால்வாயில் சந்தோஷ்(12) என்ற சிறுவன் சனிக்கிழமை மாலையில் குளிக்கச் சென்றானாம். அப்போது, கால்வாயில் இறங்கி குளித்துக் கொண்டிருக்கும் திடீரென நீரில் அடித்துச் செல்லப்பட்டு மூழ்கி உள்ளான். உடனே கரையில் இருந்த சிறுவர்கள் கூக்குரல் எழுப்பியதை தொடர்ந்து இளைஞர்கள் விரைந்து வந்து நீரில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவனை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து செவ்வாப்பேட்டை காவல் நிலைய காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மாலையில் குளிக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அக்கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com