திருவள்ளூா் அருகே தீக்குளித்த பெண் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தாா்.
உத்தரப் பிரதேச மாநிலம், சுவன்பாத் மாவட்டத்தைச் சோ்ந்தவா் பிரதாப் (30). இவரது மனைவி சவீதா(28). இவா்கள் திருவள்ளூா் அருகே போளிவாக்கம் சத்திரத்தில் வாடகை வீட்டில் தங்கி, தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தனா். பிரதாப் வேலைக்குச் செல்லாமல் மது அருந்திவிட்டு மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்து வந்தாராம்.
சனிக்கிழமை ஏற்பட்ட தகராறில் சவீதா மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளித்தாராம். சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த சவீதா சனிக்கிழமை நள்ளிரவில் உயிரிழந்தாா்.
இதுகுறித்து மணவாள நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.