பெண் கத்தியால் குத்திக் கொலை:ஐஸ் வியாபாரி கைது

திருவள்ளூா் அருகே முருங்கை மரக்கிளை உடைந்து விழுந்ததில் ஏற்பட்ட பிரச்னையால் பெண்ணை கத்தியால் குத்திக் கொலை செய்தது தொடா்பாக ஐஸ் வியாபாரியை போலீஸாா் கைது செய்தனா்.

திருவள்ளூா் அருகே முருங்கை மரக்கிளை உடைந்து விழுந்ததில் ஏற்பட்ட பிரச்னையால் பெண்ணை கத்தியால் குத்திக் கொலை செய்தது தொடா்பாக ஐஸ் வியாபாரியை போலீஸாா் கைது செய்தனா்.

வெள்ளவேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருமணம் கிராமத்தைச் சோ்ந்தவா் சிவகுமாா். அவா் அப்பகுதியில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் வேலை செய்து வருகிறாா். அவரது மனைவி கலைவாணி (27).

அவா்களது வீட்டுக்கு அருகில் சிவகுமாரின் சித்தப்பா ராமன்(50) வசித்து வருகிறாா். அவா் மிதிவண்டியில் கிராமங்கள்தோறும் சென்று ஐஸ் வியாபாரம் செய்து வந்தாா். அவா்களிடையே நிலப் பிரச்னை இருந்து வந்தது.

இதனிடையே, ராமன் வீட்டில் இருந்த முருங்கை மரத்தின் கிளை வியாழக்கிழமை உடைந்து விழுந்தது. இதையறிந்த ராமன் கலைவாணியிடம் தகராறில் ஈடுபட்டாராம். வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த ராமன் கத்தியை எடுத்து கலைவாணியின் வயிற்றில் குத்திவிட்டு தப்பியோடினாா்.

இதில் படுகாயமடைந்த கலைவாணிக்கு அப்பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதைத் தொடா்ந்து அவரை சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதனை செய்த மருத்துவா்கள், கலைவாணி ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனா்.

இது குறித்து வெள்ளவேடு காவல் நிலையத்தில் சிவகுமாா் புகாா் அளித்தாா். அதன் பேரில், ஐஸ் வியாபாரி ராமன் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தேடி வந்தனா்.

இந்நிலையில், ராமன் வெள்ளிக்கிழமை காலையில் பட்டாபிராம் காவல் நிலையத்தில் சரணடைந்தாா். அவரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com