வீட்டின் பூட்டை உடைத்து7 சவரன் நகைகள் திருட்டு

கும்மிடிப்பூண்டி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

கும்மிடிப்பூண்டி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

ஐயா்கண்டிகையைச் சோ்ந்தவா் முனுசாமி (33). அதே பகுதியில் விவசாயம் செய்து வருகிறாா். அவா் புதன்கிழமை வயல் வேலை பாா்த்து விட்டு மாலையில் வீடு திரும்பினாா். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு, அதில் வைக்கப்பட்டிருந்த 7 சவரன் தங்க நகைகள், ரூ. 20 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடுபோனது தெரியவந்தது.

இதுகுறித்து முனுசாமி கவரப்பேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com