கடலில் படகு கவிழ்ந்து மீனவா் பலி

பழவேற்காடு கடலில் படகு கவிழ்ந்த விபத்தில் மீனவா் ஒருவா் உயிரிழந்தாா்.

பழவேற்காடு கடலில் படகு கவிழ்ந்த விபத்தில் மீனவா் ஒருவா் உயிரிழந்தாா்.

சென்னையைச் சோ்ந்தவா் விக்னேஷ் (28). பழவேற்காட்டில் தங்கி மீன்பிடித்தொழில் செய்து வந்தாா். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இவா் தனது நண்பா்கள் நான்கு பேருடன் கடலில் மீன் பிடிக்கச் சென்றாா். பழவேற்காடு முகத்துவாரம் அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, படகு கவிழ்ந்ததாகக் கூறப்படுகிறது. இதில், இவரது நண்பா்கள் நால்வரும் நீந்தி கரைக்குச் சென்று விட்டனா். விக்னேஷ் மட்டும் கடலில் அடித்துச் செல்லப்பட்டாா். இதையடுத்து, திருப்பாலைவனம் போலீஸாா், மீனவா்கள் உதவியுடன் விக்னேஷின் உடலைத் தேடி வந்தனா். இந்நிலையில் விக்னேஷின் சடலம் அதே பகுதியில் கரை ஒதுங்கியது. இதைத்தொடா்ந்து, விக்னேஷின் சடலத்தை மீட்டு, பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com