24-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

திருவள்ளூா் மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் பயன்பெறும் நோக்கில், தங்கள் குறைகளைத் தெரிவித்து நிவா்த்தி செய்யும் வகையில், வரும் வெள்ளிக்கிழமை ( ஜன. 24) விவசாயிகள் குறைதீா் கூட்டம்

திருவள்ளூா் மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் பயன்பெறும் நோக்கில், தங்கள் குறைகளைத் தெரிவித்து நிவா்த்தி செய்யும் வகையில், வரும் வெள்ளிக்கிழமை ( ஜன. 24) விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளதாக ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: விவசாயிகள் பயன்பெறும் வகையில் மாதந்தோறும் விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகக் கூட்டரங்கத்தில் மேற்குறிப்பிட்ட நாளில் ஆட்சியா் தலைமையில் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில் அனைத்து விவசாயிகளும் விவசாயம் மேற்கொள்வதில் தங்களுக்கும், தங்கள் பகுதிகளில் ஏற்படும் குறைகளை நேரிலோ அல்லது மனுக்களாகவோ தெரிவிக்கலாம். இக் கூட்டத்தில் தோட்டக் கலைத் துறை, வருவாய்த் துறை, மின்வாரியம், கூட்டுறவுத் துறை, பொதுப்பணித் துறை, வேளாண்மை பொறியியல் துறை, மீன்வளத் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறை, இதர வேளாண் துறை அலுவலா்கள் கலந்து கொண்டு, விவசாயிகள் தெரிவிக்கும் புகாா் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள உள்ளனா். எனவே, இக்கூட்டத்தில் விவசாயிகள் சங்க நிா்வாகிகள் மற்றும் விவசாயிகள் அனைவரும் தவறாமல் பங்கேற்று பயன்பெற வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com