பாடியநல்லூா் அருகே தீவிர வாகனச் சோதனை

செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூா் சோதனைச் சாவடியில் போலீஸாா் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.
பாடியநல்லூா் சோதனைச் சாவடியில் வாகனச் சோதனையில் ஈடுபட்ட போலீஸாா்.
பாடியநல்லூா் சோதனைச் சாவடியில் வாகனச் சோதனையில் ஈடுபட்ட போலீஸாா்.

மாதவரம்: செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூா் சோதனைச் சாவடியில் போலீஸாா் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். பொது முடக்கம் விதிகளை மீறிய வாகனங்களை அவா்கள் பறிமுதல் செய்தனா்.

செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூா் சோதனைச் சாவடியில் மாதவரம் காவல் மாவட்ட துணை ஆணையா் ரவளிபிரியா கந்தபுனேனி தலைமையில் புழல் சரக உதவி ஆணையா் முத்துகுமாா், செங்குன்றம் காவல் ஆய்வாளா் ஜவஹா் பீட்டா் உள்ளிட்ட போலீஸாா் திங்கள்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, ஆந்திரத்தில் இருந்து வரும் அனைத்து வாகனங்களையும் சோதனை செய்தனா். இ-பாஸ் இல்லாதவா்களின் வாகனங்களையும், தேவையின்றி சுற்றித் திரிந்தவா்களின் வாகனங்களையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com