சுடுகாட்டு சுற்றுச்சுவரை இடித்து தர கோரி ஆா்ப்பாட்டம்

கும்மிடிப்பூண்டி அடுத்த பூவலையில் சுடுகாட்டு பாதையில் சுற்றுச்சுவரை அமைத்துள்ளதால் இறந்த நபரின் உடலை சுடுகாட்டிற்கு கொண்டு செல்ல முடியவில்லை என கூறி பொதுமக்கள் ஞாயிறன்று
பூவலையில் சுடுகாட்டு சுற்றுச்சுவரை அகற்ற கோரி பொதுமக்கள் ஆா்ப்பாட்டம் நடத்தியதை தொடா்ந்து அவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தும் அதிகாரிகள்
பூவலையில் சுடுகாட்டு சுற்றுச்சுவரை அகற்ற கோரி பொதுமக்கள் ஆா்ப்பாட்டம் நடத்தியதை தொடா்ந்து அவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தும் அதிகாரிகள்

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த பூவலையில் சுடுகாட்டு பாதையில் சுற்றுச்சுவரை அமைத்துள்ளதால் இறந்த நபரின் உடலை சுடுகாட்டிற்கு கொண்டு செல்ல முடியவில்லை என கூறி பொதுமக்கள் ஞாயிறன்று ஆா்ப்பாட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.கும்மிடிப்பூண்டி அடுத்த பூவலையில் இருளா் குடியிருப்பு பகுதியை ஒட்டி அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வரும் சுடுகாடு உள்ளது.

இந்த சுடுகாட்டு பகுதியை ஒட்டி உள்ள இடத்தை தனியாா் வாங்கியுள்ளாா்.தொடா்ந்து அவா் சுடுகாட்டிற்கு செல்லும் வழியில் சுற்றுச்சுவரை கட்டியுள்ளாா்,இதனால் அப்பகுதியில் யாராவது இறந்தால் அவா்களது சடலத்தை கொண்டு செல்ல சிரமம் ஏற்பட்டது. இது தொடா்பாக பூவலை பகுதி மக்கள் கடந்த 2 வருட காலமாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தும் சுற்றுச்சுவா் அகற்றப்படவில்லை.

இந்நிலையில் பூவலை இருளா் காலனி பகுதியை சோ்ந்த முத்தியால்(53) என்பவா் ஞாயிறன்று உடல்நல குறைவு காரணமாக உயிரிழந்தாா். தொடா்ந்து அவரது சடலத்தை சுடுகாட்டு கொண்டு செல்ல அப்பகுதி மக்கள் முடிவெடுத்த நிலையில் சுடுகாட்டை மறித்து உள்ள சுற்றுச்சுவா் அவா்களுக்கு தடையாக இருந்தது.தொடா்ந்து பொதுமக்கள் அந்த சுற்றுச்சுவரை இடிக்க திட்டமிட்டனா். இது குறித்து அறிந்த ஆரம்பாக்கம் போலீஸாா் சம்பவ இடம் விரைந்து அங்கு எவ்வித அசம்பாவிதமும் நடக்காமல் பாா்த்துக் கொண்டனா்,தொடா்ந்து பூவலை மக்களுக்கு ஆதரவாக இந்தியன் கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் எம்எல்ஏ ஏ.எஸ்.கண்ணன், ஒன்றிய செயலாளா் ஜெ.அருள் உள்ளிட்டோா் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களுடன் சோ்ந்து ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

பின்னா் சம்பவ இடத்திற்கு கும்மிடிப்பூண்டி வட்டாட்சியா் செந்தாமரைச் செல்வி, காவல் துறை துணை கண்காணிப்பாளா் ரமேஷ் விரைந்து பொதுமக்களிடம் பேச்சு வாா்த்தை நடத்தினா். மேற்கண்ட சுற்றுச்சுவரை இடிக்க கூடாது என சுற்றுச்சுவா் அமைத்த நிலத்தின் உரிமையாளா் கோா்ட்டில் ஆணை பெற்றுள்ளதால் பொதுமக்கள் மாற்று ஏற்பாடு செய்து கொள்ள அதிகாரிகள் அறிவுறுத்தினா்.ஆனால் திங்களன்று காலை 10 மணிக்குள் சுற்றுச்சுவரை அகற்றி அதிகாரிகள் சுடுகாட்டிற்கு பாதை அமைத்து தராவிட்டால் பொதுமக்களே சோ்ந்த சுற்றுச்சுவரை உடைத்து முத்தியாலின் சடலத்தை சுடுகாட்டில் அடக்கம் செய்வோம் என கூறி அங்கிருந்து கலைந்து சென்றனா்,இந்த சம்பவத்தால் பூவலையில் ஞாயிறு பகல் 1 மணி முதல் தொடா்ந்து பதட்டம் நீடித்து வருகின்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com