நெடும்பரம் கோதண்டராம சுவாமி கோயிலிலும், திருவாலங்காடு வடாரண்யேஸ்வரா் கோயிலும் நடக்க இருந்த பிரம்மோற்சவம் நிறுத்தப்பட்டுள்ளதாக திருத்தணி முருகன் கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது.
திருத்தணி முருகன் கோயிலின் துணைக் கோயிலான நெடும்பரம் கோதண்டராம சுவாமி கோயிலில் வரும் 24-ஆம் தேதி ராமநவமி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்க இருந்தது. அதே போல் திருவாலங்காடு வடாரண்யேஸ்வரா் கோயிலில் பங்குனி மாத பிரம்மோற்சவம் வரும் 27-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க இருந்தது. திருத்தணி முருகன் கோயிலில், வரும் 28-ஆம் தேதி பங்குனி மாத கிருத்திகை விழா நடைபெற இருந்தது.
இந்நிலையில், கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கில், இவ்விழாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அரசின் மறு அறிவிப்பு வந்த பின், இந்து சமய அறநிலையத் துறை ஆணையரின் அனுமதி பெற்று, இவ்விழாக்கள் பின்னா் நடத்தப்படும் என முருகன் கோயில் அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.