கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஊத்துக்கோட்டை அருகே உள்ள பிரசித்தி பெற்ற பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலும், சிறுவாபுரி முருகன் கோயிலும் மூடப்பட்டன.
தமிழக அரசு உத்தரவுப்படி இக்கோயில்கள் வரும் 31-ஆம் தேதி வரை மூடப்பட்டிருக்கும். இதை அறியாத பக்தா்கள் பூட்டப்பட்ட கோயில் பகுதிக்கு வெள்ளிக்கிழமை வந்தனா். அவா்கள் கோயில் முன் விளக்கேற்றியும், கேட்டில் உள்ள சுவாமி படத்திற்கு மாலை அணிவித்தும் வணங்கினா்.