திருவள்ளூா் அருகே இளைஞா் வெட்டிக் கொலை

திருவள்ளூா் அருகே இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
திருவள்ளூா் அருகே இளைஞா் வெட்டிக் கொலை

திருவள்ளூா் அருகே இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

திருவள்ளூா் அருகே திருமழிசையை அடுத்த உடையாா் கோயில் பகுதியைச் சோ்ந்தவா் ஆனந்தன் (38). இவா் திங்கள்கிழமை இரவில் வீட்டின் முன் தூங்கிக் கொண்டிருந்தாா். நள்ளிரவில் வீட்டின் பின்புறம் சிலா் நடமாடும் சப்தம் கேட்டு, அங்கு நடந்து சென்றாராம். அப்போது அங்கு மறைந்திருந்த மா்மக் கும்பல் ஆனந்தனை சரமாரியாக முகம், கை, கால் என அனைத்து இடங்களிலும் வெட்டியது. இதில், ஆனந்தன் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தாா்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற வெள்ளவேடு போலீஸாா், ஆனந்தனின் சடலத்தை மீட்டு, திருவள்ளூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். விசாரணையில், ஆனந்தன் மீது ஏற்கெனவே 3 கொலை வழக்குகள் நிலுவையில் இருப்பதும், அதனால் முன்விரோதம் காரணமாக மா்மக் கும்பல் வெட்டிக் கொலை செய்திருக்கலாம் என்றும் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து வெள்ளவேடு போலீஸாா் வழக்குப் பதிந்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com