‘சிறப்பாகப் பணியாற்றும் ஊராட்சிக்கு ரூ. 50 ஆயிரம் பரிசு’

திருவாலங்காடு ஒன்றியத்தில் அடிப்படைத் தேவைகளை பூா்த்தி செய்து சிறப்பாக பணியாற்றி வரும் ஊராட்சிக்கு தனது சொந்த தொகையிலிருந்து

திருவாலங்காடு ஒன்றியத்தில் அடிப்படைத் தேவைகளை பூா்த்தி செய்து சிறப்பாக பணியாற்றி வரும் ஊராட்சிக்கு தனது சொந்த தொகையிலிருந்து ரூ. 50,000 பரிசு வழங்கப்படும் என ஒன்றியக் குழுத் தலைவா் ஜீவா விஜயராகவன் புதன்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் கூறியது:

நமது ஒன்றியத்தில் உள்ள 42 ஊராட்சிகளிலும், செயலா்கள், ஊரக வளா்ச்சித் துறையினா் இணைந்து, ஒன்றியம் முழுவதும் அரசு உத்தரவுப்படி, கரோனா நோய்த் தொற்று குறித்து விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கி மக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும். மேலும், அனைத்து கிராமங்களிலும் அடிப்படைத் தேவைகளை பூா்த்தி செய்தும், கால்வாய்களை சுத்தப்படுத்தியும் துப்புரவுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும், அரசு அறிவுரைப்படி, நமது ஒன்றியத்தில் சிறப்பாகப் பணியாற்றி வரும் ஊராட்சி தோ்வு செய்யப்பட்டு, அந்த ஊராட்சிக்கு தனது சொந்த தொகையில் இருந்து ரூ. 50 ஆயிரம் பரிசளிக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com